tamilnadu

img

நியூஸி., கிரிக்கெட் வீரர் பெர்குசனுக்கு கொரோனா பாதிப்பு இல்லை

ஆக்லாந்து 
நியூஸிலாந்து கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஒருநாள் மற்றும் டி-20 தொடரில் பங்கேற்றது. 

இந்த சுற்றுப்பயணத்தின் தொடக்க நிகழ்வான 3 போட்டிகளைக் கொண்ட ஒருநாள் தொடரின் முதல் ஆட்டம் கொரோனா வைரஸ் அச்சம் காரணமாக ரசிகர்கள் இல்லாமல் நடைபெற்றது. போட்டி நிறைவு பெற்றபின் இருநாட்டு வீரர்கள் ஒருவருக்கொருவர் கை குலுக்கிக் கொள்ளவில்லை என்றாலும் முதல் போட்டி நிறைவு பெற்றபின் நியூஸிலாந்து வேகப்பந்து வீச்சாளர் பெர்குசன் தொண்டை வலியால் அவதிப்பட்டார். 

அவருக்கு கொரோனா அறிகுறி இருக்கலாம் என்று சந்தேகிக்க நியூஸிலாந்து அரசு தனது வீரர்களை நாடு திரும்ப உத்தரவிட்டது. இதனால் ஆஸ்திரேலிய அணிக்கெதிரான தொடர் ரத்து செய்யப்பட்டது.  இந்நிலையில், சிட்னியில் உள்ள ஓட்டலில் பெர்குசன் தனிமைப்படுத்தப்பட்டு அவருக்கு 24 மணி நேரக் கண்காணிப்பு பரிசோதனை அளிக்கப்பட்டது.  பரிசோதனை முடிவில் பெர்குசனுக்கு கொரோனா இல்லை என்பது தெரியவர அவர் இன்று ஆஸ்திரேலியாவில் இருந்து தனது நியூஸிலாந்துக்கு  திரும்புகிறார்.

;